' விவசாயம் '
ஏர் பிடிச்சி நீர் உழுத இடமெல்லாம் - வித்துக்கு
உரமாக உதிர்ந்த உதிர வியர்வை ,
சீர் தூக்கி கட்டுமையா நீ வாழ்ந்த வாழ்வை.
காளைய ஒட விட்டு
காலமெல்லாம் காத்த நிலம் ,
கார்ப்ரேட்டு காரர்களால்
காம்ப்பவுண்டு நிலமாகிடிச்சே !
சானமெனும் உரம் தெளிச்சு
சோறு தந்த உழவனுக்கு
உரங்களினால் உயிர் போகும் உயர் நிலை
உழவனுக்குகந்த நிலை இதுதானா ?
வேகாத வெய்யிலிலே வயலுக்கு பசிக்குமென
வறப்பு எனும் வழி வெட்டி வடியவிட நீர் பாய்ச்சி
பசுமைக்கு பசியாற்றி களிப்படைந்த கண்களில்
கண்ணீர் வழியும் கவலை நிலை ஆனதே .
கிடைக்காத நீருக்கும் கருணையாய் கண்ணீர்
அதைப் பார்த்தும் கிடைக்கவில்லை கர்நாடகத் தண்ணீர்.
விவசாயம் செய்தவனெல்லலாம்
வேலையில்லா வெறும்பயலென
சொல்லும் சொந்தங்களின் வாய்களில் ,
விழும் வாய்க்கரிசியாய் விவசாயம்
தன் பெருமையை நிலை நாட்டுதம்மா.
Comments