' இராணுவம் '

உறுதி கொண்டு குருதி சிந்தி உயிர் தருவாய் ,

எதிரிகளை அழித்திடவே நீ பிறப்பாய் ,

பல உயிரும் தாயிடத்தில் பால் குடிக்க ,

நீயோ உன் குருதி சிந்தி தாய் நாட்டிற்கே பால் வார்க்கின்றாய் .

ஆயுதம் ஏந்தி நின்றோரில் 
எங்கள் நாயகனாக திகழ்ந்திடுவாய்

எப்போதும் விழித்திருந்தே  
எதிரிகளை ஒழித்தருள்வாய் .

தீமைக்கு நோயாகி
தேசத்தின் தாயாகி, 

பாயப் பதுங்கும் புலியாவாய்  ,
எதிரியை பார்த்ததும் பற்றும் தீயாவாய் .


உயிர் பறிக்கும் கோழையிடம் ,

உறவுகளை நீ இழந்து உறக்கமதை நீ துறந்து

பசி மறந்து பகைவனின் உயிர் பறித்து - எங்களுக்கு ,

அன்னை காட்டும் நில ஒளியாய்

நீ திகழ்ந்தே இருள் நீக்கி வைப்பாய்

காணியினை கருத்தாக கரு சுமப்பாய்


Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை