' இராணுவம் '
உறுதி கொண்டு குருதி சிந்தி உயிர் தருவாய் ,
எதிரிகளை அழித்திடவே நீ பிறப்பாய் ,
பல உயிரும் தாயிடத்தில் பால் குடிக்க ,
நீயோ உன் குருதி சிந்தி தாய் நாட்டிற்கே பால் வார்க்கின்றாய் .
ஆயுதம் ஏந்தி நின்றோரில்
எங்கள் நாயகனாக திகழ்ந்திடுவாய்
எப்போதும் விழித்திருந்தே
எதிரிகளை ஒழித்தருள்வாய் .
தீமைக்கு நோயாகி
தேசத்தின் தாயாகி,
பாயப் பதுங்கும் புலியாவாய் ,
எதிரியை பார்த்ததும் பற்றும் தீயாவாய் .
உயிர் பறிக்கும் கோழையிடம் ,
உறவுகளை நீ இழந்து உறக்கமதை நீ துறந்து
பசி மறந்து பகைவனின் உயிர் பறித்து - எங்களுக்கு ,
அன்னை காட்டும் நில ஒளியாய்
நீ திகழ்ந்தே இருள் நீக்கி வைப்பாய்
காணியினை கருத்தாக கரு சுமப்பாய்
Comments