' தேடலே தீர்வு '

வாழ்வை படைத்தவன் ,
வாழ நம்மை படைத்தான் ,

வளர்ச்சி காண தேடல் கொடுத்தான் ,
தேடல் ஒன்றில் வாழ்வைப் புதைத்தான் ,

பிள்ளை பருவத்தில் கல்வியை தேடவைத்தான் ,
இளமை அடைந்தபின் கலவியை தேடவைத்தான் ,

மகிழ்வுடன் வாழ மூன்று  ,
முடிச்சுகள் போட வைத்தான் ,

மனையாளை காக்க ,
மாத ஊதியம் தேட வைத்தான் ,

மூச்சுள்ள வரை வாழ அறுசுவைம் ,
மூச்சு விட்டு செல்லும் நேரம் சேரும் உறவையும் ,

காலம் முழுதும் குடும்பச் சுமை தாங்கும் பொறுப்பும் ,
செல்வம் சேர்த்து சுகமாய் வாழ உருதுணை உழைப்பும் ,

இத்தனையும் வந்தின்பம் தரும் ,
அத்தனையும் நல்ல தீர்வைத் தரும் ,

இத்தனையும்  உடன் வரா போதில்
வெற்றி வரும் ,
தேடல் கொண்டு ஓடும் பொழுதில் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை