கருப்பு நிறமல்ல தரம்

ஒளிரும் வெள்ளைக்கு
கருப்பும் ஓர் காவுதான்
இரவின் வருகையால் 
வெண்மைக்கும் சாவுதான் .

கருப்பில் படியும் வெண்மை
நல்ல மொழியை தரும்,

வெண்மையில் படிந்த கருப்பு 
நல்ல விழியைத் தரும் .

நிலவை அழகாய் காட்டும்
இரவின் இருளே இனிமை ,

அதை மனிதனை தாண்டி அறியும் 
ஆந்தை பிறப்பே அருமை.

நீர் தர அக்காற்று மோதும்
மேக மூட்டமும் கருமை, 
சிரிப்பில் வெண்மை சிறக்க நிறத்தால் 
உடலில் உறவு கொள்வதும் கருமை. 

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை