வேர்கடலை

வேகாத வெயிலுல 
கால் கடுக்க நிக்குறான்
வேகவச்ச வேர்கடலய 
வேர்த்து வடிய விக்கிறான்

உப்பு தண்ணீரிலு - வேக 
வச்சதாலது விக்கல 
அவனோட உடலில் படிஞ்ச - உப்புக்காக 
ஒப்புக்கேனும் விக்குது

வானலியில் வறுகடலை
வயித்து பசிய கொஞ்சம் போக்குது
வறுக்குறப்போ வர்ர ஓசை
கேக்க இனிமை ஆகுது.

பொட்டலத்த பிறிக்கும் போது
வறுத்த மண் வாசத்த 
மூக்கு மோப்பம் புடிக்குது
சப்புகொட்டி சாப்பிட்டு
நாக்கு தாளம் போடுது.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை