Posts

Showing posts from May, 2020

காற்றின் ஊற்று

மனதை மெல்ல வருடும் காற்று மனதிற்குள் காதல் ஊற்று கானம் கூட காற்றின் காலடியில் பணிந்து வந்து மரங்களின் இசை கேட்கும்.  வேரிலே நீரை எடுத்து கை போல கிளைகள் விரித்து காய் கனிகளை தானும் அளித்து  சுவாசமாகி நமக்கும் வாழ்வளிக்கும். மின்னல்கள் கண் சிமிட்ட இடி இங்கு தாளம் தட்ட மழை தூறல் ஆட்டம் போட  காற்றோடு காதல் கொண்டாட்டம். நகருமந்த மேகம் அது வான் வெளியின் தேகம் தென்றலுடைய வேகம் எனக்கு இயற்கையின் மேல் மோகம். 

குழந்தை சிறு குறிப்பு

பாலின பேதம் பிறப்பில் பெறயியலா தாய்மை தவிப்பில் வழியறியா பலர் கரு கலைப்பில் வறுமையால் சிலர் விடுவார் அவன்  வளர்ப்பில்.  பால் பருகிட பசியால் துடித்திடும்  மதியின் சதியில் விதியென விலகிடும்  இத்தனை தடை தாண்டும் குழந்தை  தாயின் புன்னகையில் விடையாகிடும்.  வெற்றிக் கொடியுடன் பிறந்திடும் அது தொப்புள் கொடி என்றாகிடும் பிஞ்சுக் குழந்தையின் உணர்வுகள் அழகுடைய அழுகை சிரிப்புமாகிடும்.  நடைவண்டி பிடித்து நடக்கும்  முன்னே தானாகப் புரண்டு படுக்கும்  பல் முளைக்க விரலை கடிக்கும் சொல் பிறக்க மழலை வரும் அழகுக் குழந்தை தரும் இன்ப வரம். 

செருப்பு

காயத்தை காத்து காயத்தை நீக்கி  காலோடு வாழும் கீழோடு நாளும்.  தேய்ந்து மெலிந்திடும் கிழிந்து அழிந்திடும் காலில் கலந்திட கால்கள் அலைந்திடும்.  பாதம் பட்டதும் பாதை காட்டிடும் பாவப் பட்டதும்  பலருக்கு வாழ்வளித்திடும். முள்ளையும் கல்லையும் முட்டி மோதிடும் ஆளையும் காலையும் தன் தலையில் தாங்கிடும்.  காலின் உடுப்பு நா,  வாய் இதன் உறுப்பு காலுக்காய் ஓர் படைப்பு இத்தனை சிறப்புக்குறியது செருப்பு. 

கோமாளி

காதுகளில் விழியாகி, கைதட்டல் விலையாகி, கேளிக்கை கலையாகி, வாழ்க்கை இது என்றாக்கி,  சைகைகள் மொழியாகி, மேடையை தாய் மடியாக்கி, சேட்டையை கைத்தடியாக்கி, தருவான் மகிழ்ச்சியை மருந்தாக்கி. ஊராரும் சிரித்திடுவார் உன் செயலை ரசித்திடுவார் உன் மனதை யாரறிந்திடுவார் உன்னை அறிந்த நீயோ அழுகையில் சிரிப்பாவாய்.  வெளியே அலங்கோலம்  உள்ளே பல காயம்  கேளிக்கைக்காய் தன்னை  வேடிக்கை ஆக்கிடுவாய்.

நூல்கள்

என்னோடு விளையாடா எண்ணத்தில் விளையாடும் புத்திக்கும் அகத்துக்கும் புதுமை பல தந்தோடும் புரளும் பக்கங்களில் பொருள் தரும் புலமை  எழுத்தும் அறிவும் ஆரத்தழுவும் இனிமை  மை விரலின் அத்தாட்சி நடத்தும் ஓர் அரசாட்சி ஏட்டு மையின் அத்தாட்சி எழுபிறப்பும் அறிவாட்சி  வாழாத வாழ்வதனை வாசிப்பில் அறிந்திடலாம் வழியறியா மனிதர்க்கும் வழித்துணை ஆகிடலாம் கற்றதை எடுத்துரைக்கும் அறிவுச் சுரங்கம்  காகிதப் பக்க எழுத்துள் அடங்கும் சிந்தனைக்கு சிறகாகி சித்தத்தில் பறக்கவிடும் புத்தகமெனும் போர்வைக்குள் பெரும் யுத்தத்தை நிகழ்த்திவிடும்  வாழ்வியலும் வரலாறும் வழிமுறையும் எடுத்துரைக்கும் காதல் முதல் காவியமும் கவிதை வரை கலந்திருக்கும்  காலமெல்லாம் வந்தோரின் வல்லமைகள் பெரிதிருக்கும் வெற்றுக் காகிதமென கசக்கிவிட்டால் காலப்பிழை ஆகிவிடும் எல்லாமும் புத்தகத்தில் என்றாலும் என் எண்ணம்  என் புத்தகமென்று எதைச் சொந்தம் கொண்டாடும். 

தீக்கிரை

பகைமை தவிற்ப்போம் பழித்தல் மறப்போம் அறிவை வளர்ப்போம் அன்பை அளிப்போம். உறவை நினைப்போம் வெறுப்பை அறுப்போம் வலிகள் கடப்போம் வழிகள் படைப்போம். இனிமேல் விழிப்போம்  இடர்கள் ஒழிப்போம் இழவு தடுப்போம் இமயம் பிடிப்போம். தேகம் தாகத்தால் தவித்துவிட தீயும் தீமை செய்துவிட தீபத் திரிகளும் அழுகிறது அவளை எண்ணி வேதனை அடைகிறது. பகைத் தீயில் தன்னை இறையாக்கி தொடர் கதைக்கு தன்னை முடிவாக்கினால். 

பசியின் பேருரு

சொல்லவும் முடியாது சொல்லில் அடங்காது அமரர் ஆகும் வரை அடக்கவும் முடியாது.  நாம் உயிர் வாழ்ந்திட நாளும் உழைத்திடும் உடலுள் இருந்து உலகில் உலா வரும். பிறந்து பலரை இறக்க வைக்கும் தன்னையும் வதைத்து, வாழ் வளிக்கும் தின்பதே இதற்கு தீர்வாகும் உணவே இதற்கு உறவாகும்.  பல பொருள் தேடும் நமக்கெல்லாம்  உடலின் உறவாகிப் பரம் பொருளாகும் ஓர் நாளில் பல முறை, பல, பிறப்பெடுக்கும் உயிர் வாழ பசியாய் பேர் உருவெடுக்கும்.

' பிள்ளைகளின் புலம்பல் '

அழுகுற குழந்தைய  , ஆயகிட்ட விட்டுப்புட்டு  , ஹாயா காசு சேர்க்க நீங்க  , வேலைக்குத் தான் போகுறீங்க  , குழந்தைக்காக வாழுவோன்னு  , குழப்பத்தோட வாழுறீங்க  , பாசங்காட்ட மறந்துப்புட்டு  , பெத்தவங்க வேசத்துக்குள் ஒளியுறீங்க  , பணத்தின் முன்னே பாசத்தையும்  , மோசமாக பாக்குறீங்க  , நல்ல நல்ல உறவை எல்லாம்  , காசே நாச மாக்குதுங்க  , வெள்ளை உள்ளப் பிள்ளை மனதை  , பாசம் கொள்ளை அடிக்குதுங்க  .

இரவு

மதியெனும் பெண்ணோ காத்திருக்க மாலையும் இரவினை அலங்கரிக்க  மணமகனாய் காரிருள் அவதரிக்க அவன் மனதின் மையலில் நிலவிருக்கும்.  உறங்க உறவு மாகிருக்க விழித்தோர்கு ஒளித்து மகிழ்த்த காத்திருக்க பெருந்திரையில்  பிறை வடிவாயிருக்க காரிருள் கணவனில் ஓர் நாள் கலந்திருக்கும்.  பால்வெளி  முன்னே விழி காணும்  பெரு நட்சத்திரப் படை யுடையோனாய் விண்ணான நீ மண்ணுடன் விளையாட நிலவின் விழி தரும் ஒளியே வழியாகும்.  இரவின் கையில் குழலிருந்தால் இந்த காற்றும் கான மாகிவிடும் மன பாரம் பெரிதே ஆனாலும்  இவ்வெழில் முன் எதுவும் நிலைக்காது. 

என்னவள்

என் காதலும் அவள் தான்  என் காலமும் அவள் தான்  மை தரும் வார்த்தையும் அவள் தான்  வார்த்தை தந்த வாழ்க்கையும் அவள் தான்  இசை ராகமும் அவள் தான்  இசை தரும் கவியும் அவள் தான் இரவும் அவள் தான்  இரவின் எழில் நிலவும் அவள் தான்  நிலவின் வெந்நிறமும் அவள் தான்  வெண் பால் மனமும் அவள் தான்  மனதில் அன்பானவள் அவள் தான்  அன்பின் பேராற்றலும் அவள் தான்  பேராற்றலின் மாற்றமும் அவள் தான்  மாற்றம் போல் மாறா நிலை அவள் தான்  எந்நிலையிலும் எனக்கானவள் தான் என்னை முழுதும் அறியாதவள் தான்  அவளறியா வகை காதலுடையவன்  அவளறியவே இதை புனைபவன் அவளுக்கு இது புரிந்து விட்டால்  அவளின் அவன் தானிவன் அவளை காண தவமிருப்பவன்

பெண்மை

பெண்ணென்பவள் நல்லவனால் சிலையாவாள் தீயவனால் கொலையாவாள் வயிற்றுக்குள் கற்பாவாள் சிந்தையினில் கனவாவாள்.  உடலுக்கு உயிராவாள் இதயத்தின் துடிப்பாவாள்  இமைக்குள்ளே விழியாவாள் இதழோரச் சிரிப்பாவாள்.  நாணத்தால் நெளிந்திடுவாள் காதலாகி குழைந்திடுவாள் கணவனின் பொற் காலமிவள் களங்களில் அவன் வீரமிவள்.  பொன்னைவிட உயர்வானவள் பேறினில் பெண்ணானவள் இன்பந் தரும் ஆழியிவள் பழகிட நற் தோழியிவள்.