' துப்புரவு '
மனிதன் கழிவை மனிதன் அள்ள எண்ணம் முன்வரவில்லை அள்ளும் மனிதனை மனிதனாய் எண்ண எண்ணம் எண்ணவில்லை , துப்புரவென்றே சொல்லி மனிதக்கூட்டம் ஏசும் மலக் கழிவுத் தேங்க்கிக் கிடந்தால் உந்தன் வீட்டில் நாற்றம் வீசும் , ஏற்றத்தாழ்வு உள்ள வாழ்வில் இறங்க்கித்தூரு வாரும் அவர்கள் மனமும் சாதிய பேதச் சங்கடத்தில் வாடும் , சேற்றில் காலை வைத்து நல்ல சோற்றைத்தரும் உழவன் அவனை விட புனிதன் மல கழிவை அள்ளும் இந்த மனிதன் , குப்பை வண்டி வாசலில் வந்து விசிலின் வழியே கூவும் காலை நேர அவசர வேளையில் சிலரோ அவர் மேல் கொள்ளும் கோபம் , ஓர் நாள் அவன் வரவில்லையென்றால் அன்றே அறிந்து கொள்ளும் அவ் உள்ளம் கோபம் மறந்து செல்லும் . அவனின் குடும்பப் பின்னணி என்னவென்று யாருக்கும் தெரியாது தொழிழில் முன்னணி குப்பை இன்றி வேறொன்றுக் கிடையாது . சுத்தம் செய்தே நித்தம் வாழும் உத்தமரிவர் போல் வேறு யாரும் இல்லை . சமூகம் மட்டும் எப்பொழுதும் அவனுக்கென்றே தருவது மட்டும் தொல்லை .