' துப்புரவு '

மனிதன் கழிவை மனிதன் அள்ள எண்ணம் முன்வரவில்லை
அள்ளும் மனிதனை மனிதனாய் எண்ண எண்ணம் எண்ணவில்லை ,

துப்புரவென்றே சொல்லி மனிதக்கூட்டம் ஏசும்
மலக் கழிவுத் தேங்க்கிக் கிடந்தால் உந்தன் வீட்டில் நாற்றம் வீசும் ,

ஏற்றத்தாழ்வு உள்ள வாழ்வில் இறங்க்கித்தூரு வாரும்
அவர்கள் மனமும் சாதிய பேதச் சங்கடத்தில் வாடும் ,

சேற்றில் காலை வைத்து நல்ல சோற்றைத்தரும் உழவன்
அவனை விட புனிதன் மல கழிவை அள்ளும் இந்த மனிதன் , 

குப்பை வண்டி வாசலில் வந்து 
விசிலின் வழியே கூவும்
காலை நேர அவசர வேளையில்
சிலரோ அவர் மேல் கொள்ளும் கோபம் ,

ஓர் நாள் அவன் வரவில்லையென்றால் 
அன்றே அறிந்து கொள்ளும் 
அவ் உள்ளம் கோபம் மறந்து செல்லும் .

அவனின் குடும்பப் பின்னணி என்னவென்று யாருக்கும் தெரியாது
தொழிழில் முன்னணி குப்பை இன்றி வேறொன்றுக் கிடையாது .

சுத்தம் செய்தே நித்தம் வாழும் 
உத்தமரிவர் போல் வேறு யாரும் இல்லை .

சமூகம் மட்டும் எப்பொழுதும் 
அவனுக்கென்றே தருவது மட்டும் தொல்லை .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை