பெண் பித்தன்
அவளிடம் கொன்ட பெண் பித்தால்
காதல் எதுவான காண்பித்தாள்
நானும் சிறப்புற என்னை புதுபித்தாள்.
எனை நம்பாதவர் முன்
கையுடன் நம்பிக்கை தந்தாள்
என்றும் நானுன்னுடனென
வார்த்தையினால் நல் வழி தந்தாள்.
பார்வையிலே பல பொருள் தந்தாள்
கைகோர்த்து காலமெல்லா முடன் வந்தாள்
காலில்லாமல் வாழ்ந்திடுவேன்
ஒருக்காலும் அவளின்றி வாழ்வேது.
அழுகு தேவையில்லை
அவள் சிலைக்கு மெழுகு தேவையில்லை
அவளை எண்ண நினைவும் தேவையில்லை
நில்லா இதயம் இறப்பு எய்தும் வரை.
Comments