ஞாயிறு எனும் நாயகன்

பொன் வண்ணனாய் 
வானுலகின் மன்னனாய்
ஏழு புரவி வாகனத்தில்
ஒளியோடு எழுபவனே

துயில் எழும் நேரத்தில் 
முகிலுக்குள் முகம் புதைத்து 
செங்கதிர் வீசியே
உன் மொழி பேசிட

உன் வரவெதிர் பார்த்து
உலகமே இசை பாட
உயர்ந்தோங்கிய பிறப்பெல்லாம்
உனதழகை முதல் காணும்

நெருப்புக் கோளமாய்
நீ சுட் டெரிக்கிறாய்
இரவுக்கு மட்டும் ஏன் 
இடம் விட்டுக் கொடுக்கிறாய்

இயற்கையில் உன்னழகு
இன்பந்தரும் பேரழகு
நீ உச்சி ஏறுகையில்
உன் துயர் தாங்காதிவ்வுலகு.

சுட்டெரிக்கும் சூரியன்
கதிர் வீசும் கதிரவன்
பகலாக்கும் பகலவன்
அவன் ஞாலமாளும் ஞாயிறானவன்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை